ஓய்வு குறித்து தனது முடிவை அறிவித்த பிரபல வீரர்

20 ஓவர் உலகக் கோப்பை முடியும் வரை ஓய்வு பெற மாட்டேன் என்று தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியதால், டெஸ்ட் தொடரை இழக்காமல் இருப்பதற்கு, ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தென்னாப்பிரிக்கா அணி தள்ளப்பட்டுள்ளது.

3-வது டெஸ்ட்டில் ஆடிய கேப்டன் பாப் டு பிளிசிஸ், 44 ரன்கள் மட்டுமே எடுத்தார். தொடர்ந்து மோசமாக விளையாடிய வருவதால், அவரது சராசரி 20-ஐ விடவும் குறைவாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, பிளிசிஸ் ஓய்வு குறித்த செய்திகள் வெளியானது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இருபது ஓவர் உலகக் கோப்பை முடியும் வரை ஓய்வு பெற மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version