வெளிநாட்டு தடுப்பூசிகள் விரைவில் தமிழகம் வரும்: சுகாதாரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன்

ரஷ்ய தடுப்பூசி உள்ளிட்ட மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ள வெளிநாட்டு தடுப்பூசிகள் விரைவில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொராணா தடுப்பூசி திருவிழா இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை சின்ன போரூரில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்,

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது::

தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரானா இரண்டாம் அலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. நமக்கு இது படிப்படியாக ஏறும் சூழ்நிலையில் உள்ளது. போர்க்கால அடிப்படையில் நாம் தயாராகி கொண்டிருக்கிறோம். இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், “போதிய படுக்கை வசதிகளுடம் 1.45 லட்சம் ரெம்டெசிவர் மருந்து கையிருப்பில் உள்ளதாகவும் மாஸ்க் அணியாத 2.39 லட்சம் பேரிடம் 5.7 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இதுவரை கொரோனா தடுப்பூசி 40.99 லட்சம் பயன்படுத்தி உள்ளோம். வரும் இரண்டு வாரம் மிக மிக முக்கியமானது என்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை” என வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன், “பொதுமக்கள் தேவையற்ற பயணம், பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், வீட்டில் இருந்து பணி செய்ய கூடியவர்கள் அதை தானாக கடைபிடிக்கலாம் என வலியுறுதினார்.

தடுப்பூசி பொறுத்தவரை நோய் எதிர்ப்பை வலு படுத்தும் என்றும் அடுத்த2 வாரங்களுக்கு கட்டாயம் அனைவரும் முக கவசங்கள் போட்டாலே கொரானா குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தார்.

மேலும் 79 ஆயிரம் படுக்கை வசதிகள் கோவிட் கேர் செண்டரில் உள்ளது அடுத்த வாரத்திற்குள் 15 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்யப்படும் என தெரிவித்தார்.ரஷ்ய தடுப்பூசியை ( ஸ்புட்னிக் வி ) மத்திய அரசு கொள்முதல் செய்யப்பட்ட பின் தமிழகத்திற்கு தருவார்கள் எனவும் அது 91.6 % பாதுகாப்பானது எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version