’அறிவுசார் தலைமுறையை உருவாக்கிடும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்’ – இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி!

EPS teachers day wishes

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆசிரியர் தின வழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமாக செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் கல்வி கற்பித்த ஆசிரியர்களைப் போற்றும் தினமாகத் திகழ்ந்து வருகிறது

இந்நிலையில், கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்தில், “மாணவச் செல்வங்களுக்கு கல்வியுடன், நற்குணம், ஒழுக்கம், சமத்துவம் கற்பித்து, அவர்களின் வளர்ச்சிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து, சிறந்த அறிவுசார் தலைமுறையை உருவாக்கிடும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஆசிரியர்தினம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Exit mobile version