எல்லையில் பாகிஸ்தான் திடீர் தாக்குதல் – ராணுவ வீரர் வீரமரணம்

காஷ்மீரின் பூஞ்ச் பகுதியிலுள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பாகிஸ்தான், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், பூஞ்ச் பகுதியிலுள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. 

Exit mobile version