திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். திருநெல்வேலியை சேர்ந்த அப்துல் மஜீத் என்பவர் சோதனை செய்ததில், 6 லட்சத்து 31 ஆயிரத்து 385 ரூபாய் மதிப்புள்ள 197 கிராம் தங்கத்தை உடலிலும், பேண்ட் பாக்கெட்டிலும் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

Exit mobile version