ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஜனனேஸ்வரி விரைவு ரயிலில் சுமார் 13 கிலோ எடையுள்ள வெளிநாட்டு தங்க கட்டிகள் கடத்தப்படுவதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version