சென்னைக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 6 பயணிகள் கைது

இலங்கை, துபாய், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து விமானங்களில் சென்னைக்கு வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் இலங்கையை சோர்ந்த ஒரு பெண் பயணி உட்பட 6 பேர் தங்கள் உள்ளாடை மற்றும் உடலுக்குள் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களைக் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களிடமிருந்து 82 லட்ச ரூபாய் மதிப்புடைய 2 கிலோ 100 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

Exit mobile version