மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரதா சாஹூ ஆலோசனை

வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்த இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

ஃபானி புயல் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த கடந்த 30 ஆம் தேதியே அனுமதி அளிக்கப்பட்டுவிட்டதாக கூறிய அவர், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த 2 ஆயிரத்து 202 கிலோ தங்கத்தில் 14 கிலோவை தவிர மற்ற அனைத்தும் திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். இதனிடையே வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு பணி குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இன்று மாலை 4 மணிக்கு காணொலி காட்சி ஆலோசனை நடத்த இருப்பதாக சத்யபிரதா சாஹூ கூறினார்.

இந்தநிலையில் மதுரை மக்களவை தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு வைக்கப்பட்ட சீலில் எந்த மாற்றமும் இல்லை என்றார். மேலும் தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

Exit mobile version