வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும், தொள்ளாயிரத்து 88 ராணுவப் படையினர், ஆயிரத்து 522 துப்பாக்கி ஏந்திய தமிழக போலீசார், வெளிப்புறத்தில் ஆயிரத்து 589 ஆயுதப்படை போலீசார், 378 சட்ட ஒழுங்கு காவல்துறையினர் என மொத்தமாக 7 ஆயிரத்து 922 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று, பாதுகாப்பு அதிகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் மையங்கள் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version