வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக சத்யபிரதா சாஹூ ஆலோசனை

வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக, அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்திலுள்ள 38 மக்களவை தொகுதிகள் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்ற நிலையில், வரும் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. வாக்கு பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலக கூட்ட அரங்கில் காணொலிக் காட்சி மூலமாக இந்த ஆலோசனை நடைபெற்றது.

Exit mobile version