தேர்தல் பணிகளில் மூன்றரை லட்சம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்: சத்யபிரதா சாஹூ

மக்களவை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் மூன்றரை லட்சம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் என்றும், தேர்தல் பணிகளில் மூன்றரை லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

Exit mobile version