ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 20-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. இம்மாதம் 16-ம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில், வாக்காளர் சரிபார்ப்பு திட்டப்பணிகள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில், அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சத்யபிரதா சாகு ஆலோசனை வழங்கினார்.

Exit mobile version