இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்த இருக்கிறார்.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, விழுப்புரம் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம், வரும் புதன்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.

இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, நெல்லை மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்துள்ளது. மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், இரண்டு தொகுதிகளில் செய்யப்பட்டுள்ள தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை அதிகாரி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Exit mobile version