கதிர் ஆனந்த் மீதான வழக்கு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு இன்று அறிக்கை தாக்கல்

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு இன்று அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காக ஏற்பாடுகள் குறித்து விவரித்தார்.

Exit mobile version