கனரக வாகனத்தில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 4 டன் செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னையை அடுத்த மஞ்சம்பாக்கம் அருகே, கனரக வாகனத்தில் செம்மரக்கட்டைகள் இருப்பதாக, மாதவரம் காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து விரைந்து சென்று காவல்துறையினர் சோதனை செய்ததில், சுமார் 4 டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் திருவள்ளூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

Exit mobile version