ஆம்பூர் அருகே காரில் மறைத்து வைத்திருந்த 150 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

ஆம்பூர் அருகே வனப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 150 கிலோ செம்மரக்கட்டைகளை கைப்பற்றினர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வெள்ளக்கல் காப்புக்காடு பகுதியில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, புதர்களுக்கு மத்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். கார் கதவுகள் பூட்டி வைக்கப்பட்டிருந்ததை அடுத்து சந்தேகத்தின் பேரில், கதவை உடைத்து சோதனை செய்ததில், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 150 கிலோ செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து காருடன் செம்மரக்கட்டைகளை கைப்பற்றிய வனத்துறை அதிகாரிகள், செம்மரக்கட்டை கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version