வேலூரில் காரில் கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல்

வேலூர் மாவட்டம், சைனாகுண்டா வனத்துறை சோதனை சாவடி அருகே, காரில் கடத்தி வரப்பட்ட செம்மரக் கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டா சோதனை சாவடியில், குடியாத்தம் நோக்கி வேகமாக வந்த காரை வனத்துறையினர் நிறுத்த முயற்சித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. அந்த காரை பின் தொடர்ந்த வனத்துறையினர், ஆம்பூராம்பட்டி அருகே மடக்கிப் பிடித்தனர்.

அப்போது, காரில் இருந்த மர்ம நபர்கள் தப்பியோடிய நிலையில், காரை சோதனை மேற்கொண்டதில், சுமார் 300 கிலோ எடை கொண்ட செம்மர கட்டைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து, காரை பறிமுதல் செய்து, செம்மர கட்டைகளுடன், குடியாத்தம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Exit mobile version