கும்மிடிப்பூண்டி அருகே காரில் கடத்தப்பட்ட 500 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எல்லைப் பகுதியான ஏளவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர பதிவு எண் கொண்ட காரை அதிகாரிகள் சோதனையிட முயன்ற போது அதில் இருந்தவர்கள் தப்பியோடினர். இதனையடுத்து அதிகாரிகள் காரில் சோதனையிட்டதில், 500 கிலோ செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.

Exit mobile version