திருத்தணி அருகே 2 டன் செம்மரக்கட்டைகள் குளத்தில் இருந்து கண்டெடுப்பு

திருத்தணி அருகே 2 டன் செம்மரக் கட்டைகள் குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. சீனிவாசபுரம் கிராமத்தில் குளத்தில் மர்ம நபர்கள் சிலர் 2 டன் எடைக்கொண்ட 19 செம்மர கட்டைகளை வீசி விட்டு சென்றுள்ளனர். காலையில் நடைபயிற்சிக்கு சென்ற பொது மக்கள் கண்டு திருத்தணி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்த காவல் துறையினர் செம்மரக்கட்டைகளை கைப்பற்றி ஊர் பொது மக்களிடம் விசாரணை நடத்தினர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செம்மர கட்டைகளை குளத்தில் வீசி விட்டு சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version