சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செம்மரக் கட்டைகளை கடத்த முயன்ற வடமாநில நபர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செம்மரக் கட்டைகளுடன் வந்த வடமாநில நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சத்தீஸ்கரைச் சேர்ந்த மகேஷ் சிங் என்பவர் கொண்டு வந்த பார்சலை சோதனை செய்ததில் சட்டவிரோதமாக செம்மரக் கட்டைகளை கடத்தி வந்தது தெரிய வந்தது.

மகேஷ் சிங்கை கைது செய்த அதிகாரிகள் அவரிடமிருந்து 260 கிலோ செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகேஷ் சிங்கை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மகேஷ் சிங் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Exit mobile version