சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதைப்பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது

பள்ளி மாணவர்களுக்கு விற்க போதைப்பொருட்களை கடத்தி வந்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக போதைப் பொருட்கள் ரயிலில் கடத்தப்படுவதாக சென்னை காவல் துறைக்கு ரகசிய தகவல் வந்தது. இந்த தகவலின் அடிப்படையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்ற அகமதாபாத் ரயிலில் இருந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 1400 மாவா பாக்கெட்டுகள், 1000 போதை பொருள் பாக்கெட்டுகள், 300 கிலோ ஜர்தா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. காவல் துறையினர் அந்த 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version