சோழவரம் பகுதியில் 1 கோடி மதிப்பிலான 5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சோழவரம் பகுதியில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தனியார் கிடங்கில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக, சோழவரம் காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, அங்க சென்று ஆய்வு செய்தபோது, பாதாள அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 5 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட லாரியும், ஆந்திரா மாநில பதிவு எண் கொண்ட கார் உட்பட மினி லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கிடங்கில் பணிபுரியும் ஊழியர்கள் குறித்தும், உரிமையாளர்கள் குறித்தும் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version