பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற "பிராஜக்ட் எக்ஸ்போ 2019"

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் “பிராஜக்ட் எக்ஸ்போ 2019” என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாணவர்களின் தனித் திறமையை வெளிக்கொணரும் வகையிலும் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் நடைபெற்ற இந்த கண்காட்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தனிமனித மேம்பாடு, மின்சக்திக்கு மாற்றாக எரிபொருளை கொண்டு வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளை இந்த கண்காட்சியில் மாணவர்கள் காட்சிப் படுத்தியிருந்தனர். மாணவர்களின் தனித்திறனை நிரூபிக்கும்வகையில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Exit mobile version