குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை தர இருப்பதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தி பிரச்சார சபா அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை திறந்து வைப்பதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை தருகிறார். இதனால் சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக குடியரசு தலைவர் செல்லும் பாதை மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் தீவிர கண்காணிப்பு வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனிடையே சென்னையில் நிகழ்ச்சிகளை நிறைவு செய்யும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பின்னர் ஆந்திராவுக்கு செல்ல இருப்பதாக குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.

Exit mobile version