தேவேந்திரகுல வேளாளர் சட்டத்திருத்ததுக்கு அனுமதி!

தமிழகத்தில் 7 பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் தேவேந்திர குலத்தான், குடும்பன், பண்ணாடி, கல்லாடி, கடையன், பள்ளன், வாதிராயன் ஆகிய பிரிவுகளை தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரின் கீழ் கொண்டுவரும் சட்ட மசோதா மக்களவையில் மார்ச் 19ஆம் தேதியும், மாநிலங்களவையில் 22ஆம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் சட்டமசோதா நிறைவேறியதையடுத்து, இதை சட்டமாக்க குடியரசுத்லைவர் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தேவேந்திரகுல வேளாளர் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்ததையடுத்து, அது அரசிதழில் வெளிடப்பட்டு சட்டமாக அமலாகியது.

Exit mobile version