தமிழ்ப் புத்தாண்டையொட்டி குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டையொட்டி குடியரசுத் தலைவரும், பிரதமரும் தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், இந்த வருடம் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் மற்றும் செழிப்பும் வழங்கிட வேண்டிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். வரும் ஆண்டில் அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெருகட்டும், ஆசைகள் நிறைவேறட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version