ரபேல் விவகாரத்தில் மக்கள் பணம் ரூ.30 ஆயிரம் கோடியை அம்பானியிடம் மோடி கொடுத்துவிட்டார் – ராகுல்

ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் மக்கள் பணம் 30 ஆயிரம் கோடி ரூபாயை, பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கு கொடுத்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி கருப்பு பணத்திற்கு எதிராக போராடவில்லை, கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதாக கூறினார். தனது பேச்சை துவங்குவதற்கு முன் பாரத் மாதாகி ஜே என முழங்கும் பிரதமர், அதற்கு பதில் அனில் அம்பானி கி ஜே, மெகுல் ஜோக்சிக்கு ஜே, நிரவ் மோடிக்கு ஜே என்று முழங்கினால் பொருத்தமாக இருக்கும் என கிண்டல் செய்தார். பிரதமர் மோடி சிலருக்கு பாதுகாவலராக செயல்படுவதாகவும் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

Exit mobile version