எல்லை பகுதியில் 2000 ராணுவ வீரர்களை நிறுத்திய பாகிஸ்தான்

காஷ்மீரின் பாஹ் – கோட்லி எல்லை பகுதி அருகே பாகிஸ்தான் 2 ஆயிரம் ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய எல்லையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பாகிஸ்தான் தனது ராணுவ வீரர்களை அவ்வப்போது எல்லையில் நிறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version