2019ம் ஆண்டில் இதுவரை மட்டும் பாக். 2,317 முறை அத்துமீறி எல்லையில் தாக்குதல்

 

பாகிஸ்தான், இந்த ஆண்டில் இதுவரை 2 ஆயிரத்து 317 முறை எல்லைத் தாண்டி, இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் அதிக முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறிய ராணுவ அதிகாரிகள், இதுவரை 147 பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில், காஷ்மீரிலுள்ள நொவ்ஷரா பகுதியில் நேற்று பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Exit mobile version