வரிசையில் நின்று அமைச்சர் செங்கோட்டையன் வாக்களிப்பு

ஈரோட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில், அமைச்சர் செங்கோட்டையன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

தமிழகத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. வாக்களிப்பதற்காக வசதியாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் வாக்குசாவடி மையங்களை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையம் ஊராட்சி உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

Exit mobile version