வாக்காளப் பெருமக்களுக்கு அதிமுக நன்றி

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் பெருவாரியான வெற்றியை வழங்கி இருக்கும் வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என குறிப்பிட்டுள்ளனர்.

பல்வேறு சோதனைகளை மன உறுதியுடன் எதிர்கொண்டு சாதனைகளாக்கி வருவதாக அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிமுகவின் உயிர் நாடிகளாக விளங்கும் கழக உடன் பிறப்புகளின் உழைப்பாலும், உறுதியான முயற்சியாலும் இந்த வெற்றி கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அரசின் சாதனைகளால் தமிழக மக்களின் அன்பையும், ஆதரவையும் அதிமுக மீண்டும் பெற்று வருவதற்கு உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் உதாரணம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். உள்ளாட்சி தேர்தல் மூலம் 27 மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கை நிலை நிறுத்தியுள்ளதாகவும், இந்த தேர்தலில் அதிமுக வெற்றிக்காக அல்லும் பகலும், அயராது உழைத்த ஒவ்வொருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக அறிக்கையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version