சிவகங்கையில் கள்ள ஓட்டை தடுக்க முயன்ற அதிமுவினர் மீது கடும் தாக்குதல்

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில், கள்ள ஓட்டு போட முயன்றவர்களை தடுத்த அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ள ஓட்டு போட முயன்ற கள்ளிப்பட்டை சேர்ந்த 3 பேரை, கல்லல் அதிமுக ஒன்றிய கழக செயலாளர் ஜெயகுணசேகரன் உட்பட அதிமுகவினர் தடுக்க முயன்றனர். அந்த கும்பல், அதிமுகவினரை விறகு கட்டைக் கொண்டு தாக்கினர். இதில் குணசேகரன் உட்பட 7 அதிமுக நிர்வாகிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவம் குறித்து, நாச்சியாபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version