தேர்தலின் போது, அதிமுகவினரை சரமாரியாக வெட்டிய திமுக கும்பல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று, தேர்தல் நேரத்தில் திமுகவினர் கத்தியால் வெட்டி வன்முறை வெறியாட்டம் நடத்தியதில், அதிமுகவினர் 5 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்த மாசாணசாமி என்பவரது மனைவி லதா மற்றும் திமுகவை சேர்ந்த இளையராஜா ஆகியோர் போட்டியிட்டனர்.

மேட்டூர் வாக்குச்சாவடி அருகில் அதிமுகவை சேர்ந்த மாசாணசாமி தரப்பினரை, திமுகவை சேர்ந்த இளையராஜா திடீரென கொடூரமாக வெட்டியுள்ளனர். பலத்த காயங்களுடன், மாசானசாமி, சண்முகசுந்தரம், பச்சைபெருமாள், ஜெயமுருகன், ராமசாமி ஆகிய அதிமுகவினர் ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திமுகவினரின் இந்த வன்முறை செயல்களால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு நெல்லை சரக டிஐஜி அபிமன்யூ, தூத்துக்குடி எஸ்பி., அருண் பாலகோபாலன், ஆகியோர் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல வடக்கு பரும்பூர் வாக்குசாவடியில் அதிமுக பிரமுகர் மாரியப்பன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, எதிர் தரப்பினர் கொடூரமாக கல்லாலேயே தாக்கி கொன்றுள்ளனர்.

Exit mobile version