விவசாயிகள் நலத்திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் -அமைச்சர் செங்கோட்டையன்

கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்களை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் கூட்டுறவு துறையின் சார்பில் 65-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கூட்டுறவு துறையின் மூலம் விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக கூறினார். இந்த திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தினார்.

 

Exit mobile version