பிளாஸ்டிக்கை தவிர்க்க வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம்

திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் எத்தியோப்பியாவை சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரி மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் நெகிழியை தவிர்ப்போம் பசுமையை காப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது. எஸ்.பி காலனி விளையாட்டு மைதானத்தில் இருந்து கே.எஸ்.ஆர் கல்வி நிறுவன விளையாட்டு அரங்கம் வரையிலான 5 கிமீ தூரம் போட்டிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இறுதியில் பெங்களுருவில் படித்து வரும் எத்தியோப்பியாவை சேர்ந்த மிக்கியாஸ் என்ற மாணவர் முதல் இடத்தை பிடித்தார். திருவண்ணாமலையை சேர்ந்த ஜெகதீசன் இரண்டாவது இடத்தையும் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த சசிக்குமார் 3வது
இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Exit mobile version