ஓசூரில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த மாரத்தான் போட்டி

ஓசூரில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவதை வலியுறுத்தும் விதமாக மினி மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள தனியார் பள்ளி சார்பில் மினி மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. இதில் பள்ளி,கல்லூரி மாணவிகள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துவதை வலியுறுத்தும் விதமாக சேவ் வாட்டர் என்னும் தலைப்பில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு மினி மாரத்தான் ஓட்ட போட்டிகள் நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இந்த மினி மாரத்தான் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு வெள்ளி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பரிசளிக்கப்பட்டன

 

 

Exit mobile version