மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார் சச்சின் டெண்டுல்கர்

டெல்லி ஜவஹர்லால் நேரு மைதாத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டியை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தொடங்கிவைத்தார்.

டெல்லியில் இன்று அதிகாலை தனியார் அமைப்பு சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

டெல்லி ஜவஹர்லால் மைதானத்தில் இருந்து தொடங்கிய இந்தப் போட்டியை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்று, கொடியசைத்து மாரத்தான் போட்டியை தொடங்கிவைத்தார். வெற்றிபெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  

Exit mobile version