ஆரோவில்லில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புதுச்சேரி மாநிலம் ஆரோவில்லில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

புதுச்சேரியை அடுத்துள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லில், ஆண்டு தோறும் “மகிழ்சிக்கான ஓட்டம்” என்ற நோக்கத்தில் மாரத்தான் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 13வது ஆண்டாக, இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில், புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலில் இருந்தும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 42 கிலோ மீட்டர், 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், சிறியவர் முதல் பெரியவர் வரை ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இயற்கை சூழல் மிகுந்த ஆரோவில்லில் ஓடுவது தங்களுக்கு புத்துணர்ச்சியளிப்பதாக போட்டியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version