சென்னையில் மினி மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்பு

சென்னையில் தனியார் அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னை, பெசன்ட் நகரில் உள்ள தனியார் பள்ளியில் பல்வேறு தனியார் அமைப்புகள் இணைந்து நள்ளிரவு 12 மணிக்கு ஓட்டப்போட்டியை நடத்தின. 12 கிலோ மீட்டர், 6 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெற்ற இந்தப்போட்டியில் மாற்றுத் திறனாளிகள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நள்ளிரவு நேரத்தில் ஓட்டப்போட்டியில் பங்கேற்றது புதுமையான அனுபவமாக இருந்ததாக இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக மாரதான் ஓட்டம் தொடங்குமுன் அதில் பங்கேற்ற அனைவரும் அரங்கில் நடனமாடி மகிழ்ந்தனர்.

Exit mobile version