சென்னையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாரத்தான்

சென்னை அடையாறில் தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் 5000 பேர் பங்கேற்றனர்.

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக சென்னை அடையாறில் உள்ள ஆல்கார்ட் நினைவு மேல்நிலைப் பள்ளியில் தனியார் அமைப்பு சார்பாக மாரத்தான் போட்டி நடைபெற்றது. 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

Exit mobile version