‘லவ் டுடே’ பாணியில் செல்போனை மாற்றிக்கொண்ட இளைஞர் போக்சோவில் கைது!

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானதுதான் ‘லவ் டுடே’ திரைப்படம். இதனை இயக்கி நடித்தவர் ப்ரதீப் ரங்கநாதன். காதலனும் காதலியும் தங்களின் காதல் உண்மையானதுதான் என்பதை நிரூபிப்பதற்காக தங்களின் செல்போன்களை மாற்றிக்கொள்ளுமாறு கதைக்களம் அமைந்திருக்கும். அதனைத் தொடர்ந்து எழும் பிரச்சனைகளை நகைச்சுவையாகவும் செண்டிமெண்டாகவும் எதார்த்தமாக திரைக்கதையாக அமைத்திருப்பார் ப்ரதீப் ரங்கநாதன். 2k கிட்ஸ்களிடம் வெகு விமரிசையாக இந்தத் திரைப்படம் கொண்டாடப்பட்டது.

சேலத்தை அடுத்த வாழப்பாடி அருகே இந்த ’லவ் டுடே’ திரைப்படப் பாணியில்   அரவிந்த் எனும் இளைஞர்  தனது வருங்கால மனைவியிடம் செல்போனை மாற்றியுள்ளார். இந்நிலையில் அரவிந்தின் செல்போனை சரிபார்த்ததால் பெண் வீட்டார்களிடம் இவரது வண்டவாளம் பிடிப்பட்டது. அவரின் வருங்கால மனைவி என்று சொல்லப்பட்ட பெண் அந்த இளைஞரின் செல்போனில் வீடியோ ஒன்றினைக் கண்டுள்ளார். அந்த வீடியோவில் பள்ளி மாணவி ஒருவரின் ஆபாச காட்சிகள் இருந்துள்ளது. இதனைப் பார்த்து பதறிப்போன அந்தப் பெண் பெற்றோரிடமும் போலிசாரிடம் தகவல் கொடுத்துள்ளார்.

பெண் கொடுத்தத் தகவலின் பேரில் அந்த இளைஞரைப் போலிசார் கைது செய்தனர். ஆபாச வீடியோ எடுத்த இளைஞரின் மீது போக்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த இளைஞர் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விசாரனையில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதல் வலையில் தள்ளி அம்மாணவியை பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்தச் செய்தி வாழப்பாடி சுற்று வட்டாரப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version