சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மலிங்கா

யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படும் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா வருகிற 26 ஆம் தேதியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளரான மலிங்கா, 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 335 விக்கெட்டைகளை கைப்பற்றி உள்ளார். முத்தையா முரளிதரன், சமிந்தா வாஸுக்கு அடுத்தபடியாக இலங்கை அணியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை மலிங்கா பெற்றுள்ளார்.

35 வயதாகும் மலிங்கா, வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்றுள்ளார். 26 ஆம் தேதி நடைபெறும் முதல் ஒருநாள் போட்டிக்கு பிறகு மலிங்கா ஓய்வு பெறுகிறார்.

Exit mobile version