புதிய மைல்கல்லை எட்டிய பொல்லார்ட்

மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிரன் பொல்லார்ட் 500 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

மேற்கிந்திய ஆல்ரவுண்டரான கிரன் பொல்லார்ட் தற்போது இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் விளையாடி வருகிறார். முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, 25 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட இருபது ஓவர் போட்டிகளில் 500 போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

2008 ஆம் ஆண்டு முதல் இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி வரும் பொல்லார்ட் 500-வது போட்டியில் விளையாடியதை அடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version