தன்னுடைய ரூ.10 கோடி பணத்தை கமல் திருப்பித் தரவில்லை என ஞானவேல் ராஜா புகார்

உத்தம வில்லன் பட வெளியீட்டின் போது, தன்னிடமிருந்து வாங்கிய 10 கோடியை நடிகர் கமல்ஹாசன் திருப்பித் தரவில்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா அளித்துள்ள புகாரில், 2015-ம் ஆண்டில் வெளியான உத்தம வில்லன் படத்திற்காக, கமல்ஹாசன் தன்னிடம் இருந்து முன்பணமாக 10 கோடியைக் கேட்டுப் பெற்றார் என்றும், ஆனால் தற்போது வரை நான்கு ஆண்டுகளாகியும் பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்தப் புகாருக்குப் பதில் அளித்துள்ள கமல் தரப்பு, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றும், ஞானவேல் ராஜாவிடம் எந்தவித உத்தரவாதமும் தரவில்லை என்றும் கூறியுள்ளது.

Exit mobile version