ரஜினியும்,கமலும் இணைந்தாலும் அதிமுக வாக்கு வங்கி குறையாது -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

நடிகர் ரஜினியும், கமல்ஹாசன் இணைந்து கூட்டணி அமைத்தாலும் அதிமுகவின் வாக்கு வங்கியில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை தரமணியில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழர் கலை இலக்கிய மையம், சென்னை மாநகர தமிழ்சங்கம் சார்பாக தமிழ்த்தாய் – 72 என்ற தலைப்பில் தமிழாய்வுப் பெருவிழா நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக தமிழ் வளர்ச்சிக்காக பணியாற்றி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி கூறும் நிகழ்வு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் மீது கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இது குறித்து தவறான செய்தி வெளியிட்ட முரசொலி பத்திரிகை மீது வழக்கு தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version