இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட 23 பேர் இன்று மத்திய குற்றப்பிரிவு முன்பு ஆஜராகி விளக்கம் !!!

இந்தியன் 2 படப்பிடிப்பின் போது, கிரேன் விழுந்து நேரிட்ட விபத்து தொடர்பாக இயக்குநர் சங்கர் உள்ளிட்டோரிடம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இரண்டாவது முறையாக விசாரணை மேற்கொண்டனர். சென்னை அடுத்த நசரத்பேட்டை ஈவிபி பிலிம் சிட்டியில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த மாதம்19-ம்தேதி நடைபெற்றது. அப்போது கிரேன் விழுந்ததில், உதவி இயக்குநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். விபத்து தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கிரேன் ஆபரேட்டரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் நடிகர் கமல், இயக்குநர் சங்கர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று இரண்டாவது முறையாக இயக்குநர் சங்கர் உட்பட 23 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதன்படி, அவர்கள் பூந்தமல்லி ஈவிபி படப்பிடிப்பு தளத்தில் நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

Exit mobile version