நீலகிரியில் சாலை சீரமைப்பு பணிகள் தீவிரம்

கன மழையால் பாதிக்கப்பட்ட அவலாஞ்சி சுற்றுலா மையம் விரைவில் திறக்கப்படும் என வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பெய்த கன மழையால் நீலகிரி மாவட்டம் உருக்குலைந்தது. நீலகிரி மாவட்ட வியாபாரிகள் பெரும்பாலும் சுற்றுலாப் பயனிகளையே நம்பியுள்ளனர். தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதோடு, சாலைகளும் சேதமடைந்தன. தமிழக அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகள் காரணமாக சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. பணிகள் நிறைவடைந்த பிறகு போக்குவரத்து தொடங்கப்பட்டு சுற்றுலா தலங்கள் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version