புலி தாக்கி மூதாட்டி பலி !

கூடலூர் அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு யானை முகாம் அருகில், மூதாட்டி மாரி விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் திரும்ப வராததால் முதாட்டியை உறவினர்கள் தேடியபோது, புலி தாக்கி சில பாகங்களை தின்றுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் மூதாட்டியின் சில உடல் பாகங்களை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். இதனால் 500க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் புலியை பிடிக்கக்கோரி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

Exit mobile version