பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர்!

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்துள்ள கொண்டையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி கார்டன் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 6 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில் நேற்றிரவு லட்சுமி கார்டன் பகுதியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் 9 வது வார்டு திமுக கவுன்சிலர் மோகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை குறித்து கேள்வியெழுப்பி உள்ளனர். இதனால் கவுன்சிலர் மோகன்,அவரது தரப்பை சேர்ந்த ஆட்கள் சிலருக்கும், கேள்வியெழுப்பிய இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் திமுக கவுன்சிலர் மோகன் கேள்வி கேட்டவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மூவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இஞ்சம்பவம் குறித்து லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக கவுன்சிலர் பொதுமக்களை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Exit mobile version