மக்களை பாதிப்பிற்குள்ளாக்கும் தார் கலவை ஆலை!

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை பின்பற்றாமால் இயங்கும் திமுக பிரமுகரின் தார் கலவை ஆலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன், விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வரும் இந்த ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் கிராம மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வருவதாக தெரிவித்தார். எனவே, தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக பாதிப்பை உணர்ந்து பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version